The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.
தலைவர்
M P குரகமா, வங்கி துறையின் அனைத்து பகுதிகளிலும் 32 வருடங்களுக்கு மேலான விரிவான மற்றும் வெவ்வேறு அனுபவங்களைக் கொண்ட மூத்த வங்கியாளராக உள்ளார். 2024 நவம்பரில் SMIB இன் தலைவராக நியமிக்கப்பட்டார், இவர் தலைமைத்துவம், திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தில் ஆழ்ந்த அறிவை இந்த பதவிக்கு கொண்டு வருகிறார்.
தனது வாழ்க்கையில் M P குரகமா பல்வேறு பங்குகளை வகித்துள்ளார், தனது பல்திறன்களையும் துறையின் ஆழ்ந்த அறிவையும் காட்டியுள்ளார். சம்பத் வங்கியில் முக்கியமாக பணியாற்றியுள்ளார், அங்கு அவர் நிர்வாக மேலாண்மை குழுவின் மற்றும் வங்கியின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார். அவரது பங்களிப்புகள் வங்கியின் உத்திச் செல்நெறியை வடிவமைத்தல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப சிறப்பை உறுதி செய்தலில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பு, வங்கித் துறையின் ஆழ்ந்த புரிதல் மற்றும் நேர்மை அவரை ஒரு நம்பகமான தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அமைப்பு இலக்குகளை முன்னெடுப்பதிலும் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் அர்ப்பணிப்புடன் உள்ளார்.
M P குரகமா இலங்கை வங்கிகள் நிறுவனத்தின் (IBSL) கூட்டு உறுப்பினரும், ஹார்வர்ட் வணிகப் பள்ளியின் முன்னாள் மாணவரும் ஆவார். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்றுள்ளார், அதில் பிரபலமான சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றுள்ளார்.
சுயாதீன நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளர்
திரு. அருண P. ரணசிங்க அவர்கள், 2025 ஜனவரி 22 ஆம் திகதி அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் சுயாதீன நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் வங்கியியல் மற்றும் இடர் முகாமைத்துவத்தில் 38 வருட அனுபவத்தை அவர் தன்னகம் கொண்டுள்ளார். திரு. ரணசிங்க அவர்கள் முதுகலை வணிக முகாமைத்துவ பட்டம் பெற்றவர் என்பதுடன் வங்கியியல் இடர் முகாமைத்துவம் மற்றும் திறைசேரி செயல்பாடுகள் ஆகியவற்றில் பல தொழில்முறைத் தகுதிகளையும் கொண்டுள்ளவராவார்
சவுதி பிரிட்டிஷ் வங்கி, செலான் வங்கி வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம், Saudi Hollandi Bank, மக்கள் வங்கி மற்றும் ANZ Grindlays Bank ஆகிய நிறுவனங்களில் சிரேஷ்ட தலைமைப் பதவிகளை அவர் இதற்கு முன்னர் வகித்துள்ளார். மேலும், சவுதி அரேபியாவில் ஆலோசகராகவும் வருகைதரு கணக்காய்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது ஆழ்ந்த நிபுணத்துவமானது திரு. ரணசிங்க அவர்களை பணிப்பாளார் சபையின் ஓர் ஒப்பற்ற சொத்தாக நிலைநாட்டியுள்ளது. அவரது சர்வதேச அனுபவமும் தொழில்முறை நுன் சிந்தனைகளும் வங்கியின் ஆளுகை மற்றும் இடர் முகாமைத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இன்றியமையாது வழங்கி வருகின்றன.
சுயாதீன நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளார்
திரு.அத்துல C.கமகே அவர்கள், 2025 ஜனவரி 22 ஆம் திகதி அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் சுயாதீன நிறைவேற்றுதரம் சாராத பணிப்பாளாராக நியமிக்கப்பட்டார். வங்கித் துறையில் 29 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள இவர், குறிப்பாக சில்லறைக் கடன், கடன் முகாமைத்துவம் மற்றும் வங்கியியல் செயல்பாடுகளில் நிபுணத்துவம் பெற்றவராவார்.
களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை அறிவியல் மற்றும் முதுகலை வணிக முகாமைத்துவ பட்டங்களுடன், இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனத்திடமிருந்து கடன் முதுகாமைத்துவத்தில் டிப்ளோமாவையும், இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்திடமிருந்து இடைநிலைத் தகமையையும் பெற்றுள்ளார்.
தேசிய சேமிப்பு வங்கியினோடு புகழ்பெற்ற திரு. கமகே அவர்களின் தொழில் வாழ்க்கையானது, ‘பிரதிப் பொது முகாமையாளர் – கடன்’ போன்ற சிரேஷ்ட தலைமைப் பதவிகளையும், கடன், மீட்பு மற்றும் கிளை முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் பல உதவிப் பொது முகாமையாளர் பதவிகளையும் உள்ளடக்கியதாகும். கடன் செயல்பாடுகள் மற்றும் வங்கி முகாமைத்துவம் அவரது ஆழ்ந்த நிபுணத்துவம் ஆகியவை பணிப்பாளர் சபைக்கு குறிப்பிடத்தக்க மதிப்பைச் சேர்ப்பதாய் அமைகின்றது. தனது வலுவான பின்னணி மற்றும் தலைமைத்துவத்தின் மூலம், திரு. கமகே அவர்கள் வங்கியின் கடன் நிர்வாகம் மற்றும் செயல்முறைத் திறனை வலுப்படுத்துவதற்குப் பங்களித்து வருகின்றார்.
சுயாதீன நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளார்
திரு. டைரோன் கோமிஸ் அவர்கள், 2025 ஜனவரி 22 ஆம் திகதி அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் சுயாதீன நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளாராக நியமிக்கப்பட்டார். வங்கித் துறையில் 32 ஆண்டுகளுக்கும் மேலான பரந்துபட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. கோமிஸ் அவர்கள் குறிப்பாக செயல்பாடுகள், கிளை முகாமைத்துவம் மற்றும் பொது வங்கி நிர்வாகம் ஆகியவற்றில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றவராவார்.
அவர் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக முகாமைத்துவ பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து இளகலை வணிகவியல் பட்டமும் பெற்றுள்ளார். அவரது தொழில்முறைத் தகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன் முகாமைத்துவம் மற்றும் முகாமைத்துவத் துறையில் அவர் கொண்டுள்ள டிப்ளோமாக்கள் திகழ்கின்றன.
திரு. கோமிஸ் அவர்கள் தேசிய சேமிப்பு வங்கியில் ‘பிரதிப் பொது முகாமையாளர் – செயல்பாடுகள்’, ‘உதவிப் பொது முகாமையாளர் – செயல்பாடுகள்’ மற்றும் ‘பிராந்திய முகாமையாளர் – செயல்பாடுகள்’ உள்ளிட்ட முக்கிய தலைமைப் பதவிகளை வகித்துள்ளார். அவர் தற்போது MAX PBC Holdings (Pvt) Ltd இல் பொது முகாமையாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
வங்கிச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதிலும் மூலோபாய முகாமைத்துவத்திலும் உறுதியான சாதனைப் பதிவைக் கொண்டுள்ள திரு. கோமிஸ் அவர்கள், வங்கியின் செயல்பாட்டுத் திறனுக்கும் நீண்டகால வளர்ச்சிக்கும் வலு சேர்க்கும் வகையில், பணிப்பாளர் சபைக்கு மதிப்புமிக்க நுண்ணறிவினையும் வழிகாட்டுதலையும் வழங்கி வருகின்றார்.
சுயாதீன நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளார்
திரு. ரோஹண விக்ரமசிங்க அவர்கள், 2025 ஜனவரி 31 ஆம் திகதி அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் சுயாதீன நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளாராக நியமிக்கப்பட்டார். இவர் நிதி, கணக்காய்வு, வரிவிதிப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் வங்கிகளின் ஒழுங்குமுறைக் கொள்கை உருவாக்கம் மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் 32 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை (சிறப்பு) பட்டம் பெற்றுள்ளவர் என்பதுடன் சான்றளிக்கப்பட்ட உள்ளக கணக்காய்வாளார் (CIA, USA), சான்றளிக்கப்பட்ட நிதிச் சேவைகள் கணக்காய்வாளார் (CFSA, USA), மற்றும் சான்றளிக்கப்பட்ட தகவல் முறைமைகள் கணக்காய்வாளார் (CISA, USA) போன்ற புகழ்பெற்ற தொழில்முறைச் சான்றிதழ்களுடன் வலுவான பின்னணியினை கொண்டுள்ளார். அவர் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் உரிமத் தேர்வையும் (Licentiate Examination) பூர்த்தி செய்துள்ளார்.
திரு. விக்ரமசிங்க அவர்கள் இலங்கை மத்திய வங்கியில், வங்கி மேற்பார்வைத் திணைக்களத்தின் கொள்கைப் பிரிவின் தலைவர் பதவி உட்பட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மேலும், ஓமான் மத்திய வங்கியில் வங்கித்துறை நிபுணராகப் பணியாற்றி, ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வைக் கொள்கை அபிவிருத்திக்குப பங்களித்துள்ளார். வங்கி ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வையில் சர்வதேச தரநிலைகள் மற்றும் நடைமுறைகளில் அவரது ஆழ்ந்த அறிவை அங்கீகரிக்கும் வகையில், ஓமான் மத்திய வங்கியின் உச்ச கொள்கை உருவாக்கும் அங்கமான நாணயக் கொள்கை மற்றும் வங்கி மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றும் மேன்மையான வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
உள்ளக கணக்காய்வு, வங்கி ஒழுங்குமுறைகள் மற்றும் மேற்பார்வை, நிறுவன ஆளுகை, இடர் முகாமைத்துவம் மற்றும் நிதி முகாமைத்துவம் ஆகியவற்றில் அவரது ஆழ்ந்த நிபுணத்துவம், பணிப்பாளார் சபையின் மூலோபாய போக்கு மற்றும் இடர் மேற்பார்வைச் செயல்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க மதிப்பைச் சேர்க்கிறது.
நிறைவேற்றுத்தரம் சாராத, பதவி வழி பணிப்பாளார்
திரு. H. C. D. L. சில்வா அவர்கள், அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் நிறைவேற்றுத்தரம் சாராத, பதவிவழி பணிப்பாளராக பணியாற்றுகிறார். அரச சேவையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், அவர் பொது நிதி முகாமைத்துவம், திறைசேரி, கணக்காய்வு, கணக்கியல் மற்றும் பொதுக் கொள்முதல் ஆகிய துறைகளில் பரந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளார்.
அவர் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் பொது முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டமும், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக முகாமைத்துவ பட்டமும், வயம்ப பல்கலைக்கழகத்திலில் பொது முதுகலை வணிக முகாமைத்துவ பட்டமும் பெற்றுள்ளார். இத்தகையதாய் நீளும் அவரது கல்விப் பின்னணியானது, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து பொது நிர்வாகத்தில் பெற்ற இளங்கலை (சிறப்பு) பட்டத்தையும் உள்ளடக்கியதாகும்.
திரு. சில்வா அவர்கள் பட்டயப் பொது நிதி முகாமைத்துவக் கணக்காளராகவும்(ICASL), சான்றளிக்கப்பட்ட வணிகக் கணக்காளராகவும் இருப்பதுடன் பொது நிதிக் கணக்காளர்களில் ஒருவராகவும் இருந்து பரந்து பட்ட தொழில்முறைத் தகுதிகளைப் பெற்றுள்ளார். அவர் பட்டயப் பொது நிதி மற்றும் கணக்கியல் நிறுவனம் (ஐக்கிய இராச்சியம்) மற்றும் கணக்கியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளார்.
அவரது பரந்த அனுபவமும் நிதிக் கூர்நோக்கும் வங்கியின் நிதி ஆளுகை மற்றும் மூலோபாய போக்குக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகி வருகின்றன.
எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்